நாட்டை கட்டியெழுப்புவதே முக்கியம் – சந்திரிகா

265 0

சீ-600x330கடந்த அரசாங்கத்தினால் பாழடிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொள்ள தீர்மானித்தமையில் எந்த தவறும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் போசகர் சந்திரிகா பண்டாரநாயக குமாரணதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
அத்தனகல பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும், நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்லவும் யாருடன் வேண்டுமென்றாலும் இணைந்து செயற்பட தாம் தயார் என்றும் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.