ஊழல் செய்தவர்களுக்கு எதிராக வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை

211 0

ஊழல் செய்தவர்களுக்கு எதிராக வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுவத்துவதற்கு தேவையான பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளனர்.

நேற்று இரவு ஜனாதிபதி செயலத்தில், ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்த சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 52 பேர் கலந்து கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

இதன்போது ஊழல் மோசடி தொடர்பான வழக்கு நடவடிக்கைகள் காலதாமதமாவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment