இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை மறுப்பு

343 0

26-1469509730-fishermen-boat467இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் 129 படகுகளை விடுவிக்க இலங்கை அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.
எப்படியிருப்பினும் இரு நாடுகளின் மீனவர்களின் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மீனவர்களின் பிரச்சினை குறித்து ஆராயும் வகையில் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் அண்மையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன், நிஹால் கலப்பதி மற்றும்  கடற்படையைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இதேவேளை இந்திய தரப்பினருடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக அமைச்சர் அமரவீர அடுத்த மாதம் 5ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார்.
இந்திய விஜயத்திற்கு முன்னர் அமைச்சர் இலங்கை மீனவர்களின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.