ராஜிதவுக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாளை சபாநாயகரிடம் ஒப்படைப்பு

213 0

ஏழு குற்றச்சாட்டுக்களின் கீழ் சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று இன்று (24) அல்லது நாளை (25) சபாநாயகரிடம் ஒப்படைக்கவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்ஷா தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவான கையொப்பம் இன்று பாராளுமன்றத்தில் பெறப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கம் மதிப்பீடு செய்த பெறுதியை விட குறைந்த பெறுமதிக்கு மோதர மீன்படி துறைமுகத்தை குத்தகைக்கு விடல், ஊழல் மோசடி விசாரணைகளில் கலந்துகொள்ளாமல் தவிர்ந்து வருகின்றமை உட்பட ஏழு குற்றச்சாட்டுக்கள் இவருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment