தென் ஆப்பிரிக்காவில் எஸ்ட்கோர்ட் பகுதியில் மனித இறைச்சி உண்ட வைத்தியர்கள் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டள்ளனர்.
குறித்த நபர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணைகளில் இருந்து, அவர்களிடமிருந்த மனித உடற்பாகங்களை அந்நாட்டு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தநிலையில் அவர்களுக்கு எதிராக கொலை மற்றம் கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக வழக்கு தொடர்ப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த பகுதியில் தங்களது உறவினர்கள் எவரேனும் காணாமல் போயிருந்தால் தகவல்கள் தெரிவிக்கும்படி பொதுமக்களிடம் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.