ஜோன்சன் என்ட் ஜான்சன் நிறுவனம் 417 மில்லியன் டொலர்களை இழப்பீடாக வழங்க உத்தரவு

232 0

ஜோன்சன் என்ட் ஜான்சன் நிறுவனத்தின் பவுடரை பயன்படுத்தியதால் கருப்பை புற்றுநோய் ஏற்பட்ட பெண்ணுக்கு, 417 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க அந்நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

ஜோன்சன் என்ட் ஜான்சன் நிறுவனத்தின் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் புற்றுநோய் அபாயங்கள் தொடர்பில்,  குறித்த நிறுவனம் போதியளவில் எச்சரிக்கை வழங்கவில்லை என தெரிவித்து பல வழக்குகள் தொடர்ப்பட்டுள்ளன.

எனினும் அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பிலேயே அதிகபடியான இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த தீர்ப்பிற்கு  எதிராக ஜோன்சன் நிறுவனம் மேன்முறையீடு செய்ய உள்ளதாகவும் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a comment