வடக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்கள், இன்று பதவிப்பிரமாணம் (காணொளி)

31373 0

வடக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்கள், வட மாகாண ஆளுனர் றெஜினோல்ட் கூரே முன்னிலையில், இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
வடக்கு மாகாண நிதி திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, காணி விவகாரம், வீடமைப்பு, போக்குவரத்து, மின்சாரம், சுற்றுலாத்துறை, உள்ளுராட்சி, மாகாண நிர்வாகம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சராக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுனர் றெஜினோல்ட் கூரே முன்னிலையில், சத்தியப்பிரமானம் செய்துகொண்டார்.
வடக்கு மாகாண விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை, மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக, புளொட் அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் சத்தியப்பிரமானம் செய்துகொண்டார்.
அத்துடன் சுகாதாரம் சுதேச மருத்துவம், சிறுவர் விவகார அமைச்சராக, ரெலோ அமைப்பின் மன்னார் மாவட்ட மாகாண சபை உறுப்பினர் வைத்தியக்கலாநிதி ஞானசீலன் குணசீலன் சத்தியப்பிரமானம் செய்துகொண்டார்.
இதேவேளை வடக்கு மாகாண மகளிர் விவகாரம் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சராக இருந்த அனந்தி சசிதரன், இன்று வட மாகாண பெண்கள் விவகாரம், புனர்வாழ்வு, சமூக சேவை, கூட்டுறவு, வர்த்தக வாணிபம், உணவு வழங்கல் விநியோகம் சிறுதொழில் முயற்றி ஊக்குவிப்பு அமைச்சராக சத்தியப்பிரமானம் செய்துகொண்டார்.
மேலும் நிதி திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, காணி விவகாரம், வீடமைப்பு, போக்குவரத்து, மின்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளராக ரூபினி வரதலிங்கமும்,
விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை, மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளராக எஸ்.சத்தியசீலனும்,
பெண்கள் விவகாரம், புனர்வாழ்வு, சமூக சேவை, கூட்டுறவு, வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளராக ஆர்.வரதீஸ்வரனும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

Leave a comment