காணாமல் போனோர் சட்டமூலத்திற்கு இடைக்காலத் தடை கோரிக்கை

470 0

6111நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைப்பது தொடர்பான சட்டமூலத்திற்கு இடைக்கால தடை விதிக்குமாறு மஹிந்த அணியினர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்ய உள்ளனர்.
அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.
காணாமல்  போனோர் அலுவலகம் அமைக்கப்படுவதை தமது கட்சி எதிர்க்கவில்லை என தெரிவித்த அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனையின் அடிப்படையில் அது அமைந்துவிடக் கூடாது, என்பதையே தாம் வலியுறுத்திவருவதாக வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.