சுமந்திரனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

692 0

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை, கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 5 சந்தேக நபர்களையும், எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இனறு வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த ஐந்து சந்தேக நபர்;களும் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் ஆயர்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து வழக்கினை விசாரணை செய்தி நீதிபதி, ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் 2011 ஆம் ஆண்டு சந்தேக நபர் ஒருவரை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a comment