ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கமைய, அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தாம் வெளியேற மாட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவை, அவர் வகிக்கும் அனைத்து அமைச்சரவைப் பதவிகளில் இருந்தும் நீக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியிடம் கடிதமொன்றின் ஊடாக நேற்று கோரியிருந்தார்.
அந்தக் கடிதத்துக்கு பதலளித்திருந்த ஜனாதிபதி, அந்த தீர்மானத்துக்கு அனுமதி வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டதாக அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஜனாதிபதியின் அறிவுப்புக்கமைய அமைப்புப் பதவியிலிருந்து தாம் விலகுவதாக விஜேதாஸ ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.