விஜயதாஸவை அனைத்து பதவிகளிலும் இருந்து நீக்க பிரதமர் ஜனாதிபதியிடம் கோரல்

217 0

அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவை, அவர் வகிக்கும் அனைத்து அமைச்சரவைப் பதவிகளில் இருந்தும் நீக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கோரியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைய இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறி செயற்பட்டதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுசெயலாளர் கபீர் ஹசீம் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டை சீராக்குவதற்கு நேற்று வரையில் அமைச்சர் விஜயதாசவுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த போதும், அவர் அதனை சீர்செய்ய தவறிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே அவரை பதவி நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.

Leave a comment