தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் – ஜி.கே.வாசன் 

1577 0

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என  ஜி.கே.வாசன் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் சில விவசாயிகளும், தமிழகத்தில் பல இடங்களில் விவசாயிகளும் போராடி கொண்டு வருகிறார்கள்.

அவர்களது போராட்டத்தை கவனத்தில் கொண்டு மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் இதுவரை நடை பெறாததால் உள்ளாட்சிகளில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். அ.தி.மு.க.வில் இரு அணிகள் இணைவது அவர்களது உட்கட்சி பிரச்சினை.

மேலும் 2 அணிகள் இணைவது என்பது இயல்பான விஷயம். அவர்கள் இணைத்தால் தமிழகத்துக்கும், மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என வாசன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment