மிக் ஆவணங்கள் தொடர்பாக முன்னாள் விமானப்படைத் தளபதிகளிடம் விசாரணை!

332 0

1343452806Untitled-1மிக்-27 விமானங்களின் முக்கிய ஆவணங்கள் காணாமல் போனமை தொடர்பாக2006ஆம் ஆண்டிற்குப் பின்னர் விமானப்படை இராணுவத் தளபதிகளிடம் விசாரணை நடாத்தப்படவுள்ளது.

2005ஆம் ஆண்டு மிக்-27 போர் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் முறைகேடுகள் இடம்பெற்றது தொடர்பாக கொழும்பு கோட்டே நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த முறைகேடு தொடர்பாக விசாரணைப் பிரிவினர் விசாரணை நடாத்தி வருகின்றனர். இந்நிலையில் மிக்-27 போர் விமானத்தின் கொள்வனவு தொடர்பான மூல ஆவணங்கள் காணாமல்போயுள்ளதாக விமானப்படை சார்பில் முன்னிலையான தளபதி ஜூலை மாதம் 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக விசாரணை செய்வதற்கு விமானப்படையினர் நீதிமன்றம் ஒன்றை நிறுவ உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த 8ஆம் திகதி மீண்டும் இது தொடர்பான விசாரணையை விசாரணைக்கு எடுத்த கோட்டை நீதிமன்றம், காணாமல் போனதாகக்கூறப்படும் மிக் விமானக் கொள்வனவின் முக்கிய ஆவணங்கள் தொடர்பாக நிதிக் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் விசாரணை செய்யவேண்டுமெனத் உத்தரவிட்டார்.

ஆவணங்களை மறைத்து, இந்த விசாரணைகளைக் குழப்ப எவர் நடவடிக்கை எடுத்திருந்தாலும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிவான் பணித்துள்ளார்.

இதற்கிடையே, மிக் விமானக் கொள்வனவின் முக்கிய ஆவணங்கள் காணாமல் போனமை தொடர்பாக விமானப்படையின் முக்கிய அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்த முறைகேடு குறித்து ரவி வைத்தியாலங்கார தலைமையிலான நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு, விசாரித்து வருகிறது.