ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66 ஆவது மாநாட்டிற்கு முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக் ஷ ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பங்காளிக் கட்சிகளும் பங்குகொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியின் ஐக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66வது ஆண்டு நிறைவு நிகழ்வு அடுத்த மாதம் 3 ஆம் திகதி கொழும்பு பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இம் மாநாட்டிற்கு சுதந்திர கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.