புறக்கோட்டையில் இரு ஆர்ப்பாட்டங்கள் – கடும் வாகன நெறிசல்

347 0

பொலித்தீன் உற்பத்தியாளர்கள் இன்று புறக்கோட்டையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டு வருவதால் கொழும்பு கோட்டைக்கு அன்மித்த பாதைகளில் கடும் வாகன நெறிசல் நிலவுகிறது.

குணசிங்கபுர பஸ் தரிப்பிடத்துக்கு இவர்கள் தமது ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதி முதல் பொலித்தீன் உற்பத்திக்கு அரசு தடை விதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதேவேளை, மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு தடை விதிக்குமாறு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment