சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு புதிய மாணவர்கள் அனுமதி

243 0

சைட்டம் மருத்துவ நிறுவனத்திற்கு எதிராக யார் எதைக் கூறினாலும் இன்னும் 300 புதிய மாணவர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அனுமதிக்கவுள்ளதாக சைட்டம் மருத்துவ நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் நெவில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதன்படி இலங்கை மாணவர்கள் 200 பேரும், வெளிநாட்டு மாணவர்கள் 100 பேரும் அடங்கலாக 300 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சில அமைச்சர்கள் இரண்டு பக்கமும் இருந்து கொண்டு அரசை விமர்சிப்பதாகவும் அவ்வாறானவர்களை அரசிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தான் வேண்டிக்கொள்வதாகவும் வைத்தியர் நெவில் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment