பாதாள உலக குழுக்களை ஒடுக்க அதிரடி நடவடிக்கை

325 0

நாட்டில் பர­வ­ல­டைந்­துள்ள பாதாள உலக நட­வ­டிக்­கை­களைக் கட்­டுப்­ப­டுத்­தவும், பாதாள              உல­கத்தை ஒடுக்­கவும் விசேட அதி­ரடிப்படையில் 1000 பேர் கொண்ட சிறப்பு படை­யணி ஒன்று ஸ்தாபிக்­கப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான நட­வ­டிக்­கைகள் தற்­போது ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் இந்த 1000 பேர் கொண்ட படை­ய­ணியில் உள்­ள­டங்கும் உறுப்­பி­னர்­களை தேர்வு செய்யும்                  நட­வ­டிக்­கைகள் தற்­போது ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

போதைப்பொருள் தடுப்பு மற்றும் பாதாள உல­கத்தை ஒடுக்கல் ஆகிய பணி­க­ளுக்­காக                  கடந்­த­வாரம் விசேட பொலிஸ் படை­யணியானது பொலிஸ் விசேட அதி­ரடிப் படையில்                       ஏற்­ப­டுத்­தப்­பட்ட நிலை­யி­லேயே அதன் கீழ் வரும் இந்த  1000 பேர் கொண்ட விசேட படை­யணி      ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

இதற்­கான ஆரம்­ப­கட்ட நட­வ­டிக்­கைகள் பூர்த்­தி­யா­கி­யுள்ள நிலையில், அந்த படை­ய­ணியில் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டு­வோ­ருக்கு போதைப்பொருள் தடுப்பு, பாதாள உலக கட்­டுப்­பாட்டு உபாயம் என்பன தொடர்பில் சிறப்பு பயிற்­சி­களும் அளிக்­கப்­ப­ட­வுள்­ளன.

இதற்­கான அனைத்து நட­வ­டிக்­கை­களும் விசேட அதி­ரடிப்படை கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீபின் கீழ் முன்னெடுக்கப்பட் டுள்ளன.

Leave a comment