நாட்டில் பரவலடைந்துள்ள பாதாள உலக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், பாதாள உலகத்தை ஒடுக்கவும் விசேட அதிரடிப்படையில் 1000 பேர் கொண்ட சிறப்பு படையணி ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த 1000 பேர் கொண்ட படையணியில் உள்ளடங்கும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் தடுப்பு மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்கல் ஆகிய பணிகளுக்காக கடந்தவாரம் விசேட பொலிஸ் படையணியானது பொலிஸ் விசேட அதிரடிப் படையில் ஏற்படுத்தப்பட்ட நிலையிலேயே அதன் கீழ் வரும் இந்த 1000 பேர் கொண்ட விசேட படையணி ஏற்படுத்தப்படவுள்ளது.
இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், அந்த படையணியில் இணைத்துக்கொள்ளப்படுவோருக்கு போதைப்பொருள் தடுப்பு, பாதாள உலக கட்டுப்பாட்டு உபாயம் என்பன தொடர்பில் சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படவுள்ளன.
இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் விசேட அதிரடிப்படை கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீபின் கீழ் முன்னெடுக்கப்பட் டுள்ளன.