பரிட்சை வினாதாள் வெளியான சம்பவம் – ஆசிரியரின் உறவினர் இருவர் கைது

503 0

உயர்தரப் பரிட்சையின் இரசாயன பாடத்திற்கான வினாக்களை ஒத்த மாதிரி வினாக்களை விநியோகித்த ஆசிரியர் ஒருவரது சகோதர் மற்றும் தந்தை ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கந்தான பட்டகம பிரதேசத்தில் வைத்து இவர்கள் இருவரும் இன்று காலையில் கைதுசெய்யப்பட்டனர்.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இராசாயணவியல் பாடத்தின் வினாத்தாள்களை ஒத்த மாதிரி வினாத்தாள்கள் கம்பஹா பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றை அண்டிய பகுதியில் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பரிட்சைகள் ஆணையாளரால் காவல்துறையில் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டது.

இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் வகுப்பு ஆசிரியர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அநுராதபுரத்தில் இடம்பெற்ற பரிட்சையின்போது இரசாயண பாடத்தின் இரண்டாம் பாகத்தின் வினாத்தாள்கள் குறைவடைந்திருந்தாக இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment