முன்னாள் அமைச்சருக்கு பிணை

264 0

முன்னாள் பொது வான் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன மற்றும் அவரின் தனிப்பட்ட செயலாளர் பாலமானகே தயாவங்ச ஆகியோர் 75 ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும் 10 லட்சம் ரூபா சரீர பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதவான் இன்று இதற்கான அனுமதியை வழங்கினார்.

பொது வான் போக்குவரத்து சேவை அதிகார சபையில் இல்லாத பதவிகளை உருவாக்கி அதன்பொருட்டு தமது தனிப்பட்ட செயலாளரை நியமித்தமை தொடர்பில் லஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் அந்த வழங்கு தொடர்பான விசாரணைகள் செம்டம்பர் மாதம் 25ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Leave a comment