அரசியல் தலைமைகள் கூட்டு அரசாங்கத்தை அமைத்தவுடன் இன ஒற்றுமை வந்து விடமாட்டாது என அமைச்சர் ரவுஃப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஏறாவூரில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.
யுத்தத்திற்குப் பின்னர் அபிவிருத்தி என்ற விடயத்தில் இனங்கள் மத்தியில் புரிந்துணர்வு இல்லை.
அபிவிருத்திகளைப் பகிர்ந்துகொள்வதிலே இனங்களுக்கிடையில் சந்தேகம் நிலவுகின்றது.
அரசியல் தலைமைகள் கூட்டரசாங்கத்தை அமைத்தவுடன் இன ஒற்றுமை வந்துவிடாது.
அது மக்களின் புரிந்துணர்வில் இருந்து வர வேண்டும் எனவும் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர் நியமனங்களில், பதவி நிலைகளில், நிறைவேற்று அதிகாரங்களில் சமத்துவம் பேணப்பட வேண்டும்.
இவ்வாறான பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியிலேயே கிழக்கு மாகாண சபை செயற்பட்டுவருவதாக அமைச்சர் ரவுஃப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.