மத்தியவங்கியின் முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவடைந்தவுடன், குறித்த முறி விற்பனை இரத்து செய்யப்பட வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
குருணாகலில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
முறி மோசடி தொடர்பில் புதிது புதிதாக அதனுடன் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டுவருகின்றனர்.
மத்தியவங்கியின் முறி மோசடியின் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் மாதம் ஒன்றுக்கு 35 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகின்றனர்.
எனவே, அவர்கள் இந்த மோசடி தொடர்பில் தண்டிக்கப்பட்டாலும், தண்டனை நிறைவடைந்து வெளியில் வரும்போதும் பெருமளவு வருமானத்தை ஈட்டியிருப்பர்.
எனவே, குறித்த முறி விநியோகம் இடம்பெறாத ஒன்றாக இரத்துசெய்யப்பட வேண்டும் என தயாசிறி ஜெயசேகர குறிப்பிட்டுள்ளார்.