அரசாங்கத்தை மேலும் 5 வருடங்கள் கொண்டுச் செல்ல ஜனாதிபதி இணக்கம் – பிரதமர்

206 0

தற்போதைய அரசாங்கத்தை 5 ஆண்டுகளுக்கு தொர்ந்தும் நடத்திச்செல்ல ஜனாதிபதியுடன் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிரிந்திவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

அரசாங்கம் மாற்றப்பட வேண்டும் என கூறுகின்றனர்.

அரசாங்கம் மாற்றப்பட்டால், இலங்கை சர்வதேச அரங்கில் மீண்டும் பின்னடைவுக்கு முகம் கொடுக்கும்.

நாட்டின் அபிவிருத்தியில் பின்னடைவு ஏற்படும் என தெரிவித்தார்.

அரசாங்கம் மாற்றப்பட வேண்டும் என கூறுகின்றவர்கள் தற்போது நாடு எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு மாற்று வழிகளை கூற வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்

Leave a comment