வழக்குகளை தாமதப்படுத்துவது நீதி அமைச்சரே – ராஜித

226 0

நீதிமன்ற வழக்குகளை தாமதப்படுத்துவது நீதி அமைச்சரே என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சரிடம் பிரச்சினைகள் உள்ளதாகவும்,இரண்டரை வருடமாக வழக்குகள் விசாரிக்கப்படாமல் இருப்பதற்கு அச்சுறுத்தல் விடுத்தவரும் நீதி அமைச்சரே என்றும் அமைச்சர் ராஜித குறிப்பிட்டுள்ளார்.

தான் சுகாதாரத்துறையில் செய்துள்ள வேலைகளில் பத்தில் ஒரு வீதமான வேலைகளை சரி நீதியமைச்சர் செய்திரப்பாராயின் தான் அமைச்சுப் பதவியில் இருந்து விலக தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் ராஜித குறிப்பிட்டுள்ளார்.

தொம்பே-கிரிந்திவெல பஸ் தரிப்பிடத்தை நேற்று திறந்து வைத்து உரையாடும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எனவே பதவி விலக தீர்மானித்துள்ள நீதியமைச்சரை பதவி விலகி செல்ல இடமளிக்குமாறு பிரதமரிடமும்,ஜனாதிபதியிடமும் வேண்டுகோள் விடுப்பதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Leave a comment