பிரதமருக்கு எதிராகவும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும்-வாசுதேவ

337 0

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் விசாரணைகள் முன்னெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

3 நாட்களுக்கு முன்பாக கடிதம் மூலம் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நியமித்தது பிரதமர் என்பதால் அவரே அனைத்து விடயங்களுக்கும் பொறுப்புக் கூறவேண்டும் என்றும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment