பிரதமர் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் விசேட ஒன்றுகூடல்

310 0
நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தொடர்பில் இன்று ஐக்கிய தேசிய கட்சியின் விசேட ஒன்றுகூடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
 இந்த சந்திப்பு பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.
கடந்த வாரம் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது.
இதன் போது கட்சிக் கூட்டத்தில் அமைதியற்ற நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a comment