அம்பலாந்தோட்டை ருஹூனு ரிதியகம பிரதேசத்தில் பெண்களால் நடத்தப்பட்டு வந்த சூதாட்ட விடுதி ஒன்றை காவல்துறையினர் முற்றுகையிட்டுள்ளனர்.
நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ருஹூனு ரிதியகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இந்த சூதாட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் கர்ப்பிணி பெண் ஒருவரும் சிறுபராயத்தவர் ஒருவரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கைது செய்யப்பட்ட ஆறு பேரும் திருமணமானவர்கள் என்பதுடன், அவர்களின் கணவர்கள் இல்லாத பகல் வேளைகளில் சூதாட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.