நாட்டின் நலனுக்காகவே தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அக்குரஸ்ஸ பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2 வருடமாக நாட்டிற்கு தேவையான வேலைத்திட்டங்களை செய்ததன் பிரதிபலன் இன்று கிடைப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பழைய பாவங்களை போக்கவும்,சீரழிந்த பொருளாதார கட்டியெழுப்பவும் தமக்கு இரண்டு வருடங்கள் தேவைப்பட்டதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.