யாழ்ப்பாணத்தில் 27 இந்தியர்கள் கைது

1097 0

இந்தியப் பிரஜைகள் 27 பேர் யாழ்ப்பாணத்தில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் குடியகல்வு, குடிவரவுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 19 பேர் சாஸ்திரம் கூறுபவர்களாக குடா நாட்டில் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்துள்ளனர்.

ஏனையவர்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் விசா காலம் முடிவடைந்த போதிலும் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a comment