துப்பாக்கி ஒன்றுடன் நபர் ஒருவர் கைது!

210 0

இங்கிரிய – ஹதபான்கொடை பிரதேசத்தில், துப்பாக்கி ஒன்றுடன் நபர் ஒருவர் குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 17 ஆம் திகதி இரவு நேரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றின் போது, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

பின்னர் சந்தேக நபர், ஹொரனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து, எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஹதபான்கொடை பிரதேசத்தினை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment