இன்று காலை யாழ் சாவகச்சேரியில் விபத்து – ஒருவர் பலி!

232 0

யாழ் சாவகச்சேரியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரியை சேர்ந்த குறித்த குடும்பஸ்தர் வீட்டில் பறித்த தேங்காயை விற்பனை செய்ய சாவகச்சேரி பொதுச் சந்தைக்கு கொண்டு சென்ற வழியில் சாவகச்சேரிக்கு நீதிமன்றிற்கு முன்பாக கண்டி வீதியில் டிப்பருடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.
சைக்கிளில்  சென்றவரை, எதிரே வந்த டிப்பர் வாகனம் மோதித் தள்ளியது.

இந்த விபத்தில் தோப்பு ஒழுங்கை மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய சிவராஜா(என்பவரே உயிரிழந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டது.
டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன். மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment