இலங்கையில் சில இடங்களில் மண்சரிவு எச்சரிக்கை 

250 0

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்து பகுதியில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன், குக்குளே கங்கை நீர்த்தேக்கத்தின் அவசர வான்கதவு திறக்கப்பட்டுள்ளதால், நீர்த்தேகத்தின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று 75 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகலாம் என்றும் காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

Leave a comment