பொகவந்தலாவையில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

231 0

பொகவந்தலாவ சென் விஜயன்ஸ் தோட்டத்தில் சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு பேரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் இன்று புதன் கிழமை அதிகாலை 01மணியளவில் கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கபடுகிறது.

இதேவேளை மாணிக்க கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு சில உபகரனங்களையும் பொலிஸார் கைபற்றியதாக குறிப்பிட்டனர்.

கைது செய்யபட்ட இரண்டு பேரும் இன்றையதினம் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a comment