சுவிஸ்குமாரிடம் இருந்து 5 காணொளிகள் மீட்பு?

305 0

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் முக்கிய சந்தேக நபரான சுவிஸ்குமார் எனப்படும் மஹாலிங்கம் சசிகுமார், ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் பெண்களை ஈடுபடுத்தி பாலியல் சார்ந்த காணொளிகளை தயாரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவற்துறைப் பிரிவின் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட 5 காணொளிகள் அவரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளை இலக்கு வைத்து இவ்வாறான காணொளிகளை தயாரித்து அவர் விற்பனை செய்துவந்துள்ளதாக ஏற்கனவே நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment