காவல்துறையினரின் தவறான துப்பாக்கி பிரயோகம்  

754 0

வேயங்கொட மேம்பாலத்தில் வைத்து காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவரின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்று வதுபிட்டிவல மருத்துவமனையின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குற்றச்சசெயல்களுடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்யச் சென்ற நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகம் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கல்முனை விசேட குற்றவிசாரணை பிரிவு அதிகாரிகள் குழு, குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஒருவரை இலக்கு வைத்து இந்த விசேட நடவடிக்கையை மேற்கொண்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் காவல்துறைமா அதிபர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

காவல்துறை குழு சிற்றூர்தியில் பயணம் செய்துகொண்டிருக்கையில் குறித்த சந்தேகத்திற்குரியவர் வேயங்கொட மேம்பாலத்திற்கு அருகில் அதனை நிறுத்த முற்பட்டுள்ளார்.

அதன்போது காவல்துறையினர் பயணித்த வாகனத்தை தடுத்துவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட நிலையில், காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது அருகில் இருந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சந்தேகத்திற்குரியவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment