முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கூட்டு எதிர்கட்சியை அங்கத்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கிடையே இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெறவுள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் செயற்பாடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.