நபரொருவர் கொடூரமாக கொலை!

267 0

குருநாகல் – வெல்லவாய – உயன்கொல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதம் மற்றும் பொல்லினால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிலருக்கு இடையே ஏற்பட்ட முறுகலை சமரசப்படுத்த சென்ற போதே அவர் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதில் படுகாயமடைந்த 53 வயதான உயன்கொல்ல பிரதேசத்தை சேர்ந்த நபர், வெல்லவாய – ஹரிபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், அவர்களை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Leave a comment