யுத்தம் நிறைவுற்று பல ஆண்டுகள் கடந்தாலும் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவில்லைஎன மக்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் பல குளங்கள் காணப்படுகின்ற போதிலும், குறித்த குளங்களை அபிவிருத்தி செய்து விவசாயம், நன்னீர் மீன்பிடிகளை ஊக்குவிப்பதுடன் நிலத்தடி நீரையும் பாதுகாக்க முடியும் என்பதே எமது முன்னோர்களின் எதிர்பார்ப்பாகும். இவ்வாறு பல குளங்கள் அமைக்கப்பட்ட போதிலும் அவற்றை அபிவிருத்தி செய்யப்படாமையால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டே வருகின்றனர்.கிளிநொச்சி குடமுருட்டி குளம் என அழைக்கப்படும் சின்னபல்லவராயன் கட்டு குளத்தினை நம்பி 300 மேற்பட்ட சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது, இதனால் 300 மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தினை முன்னெடுத்து வரும் அதே வேளை 100 மேற்பட்ட குடும்பங்கள் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். குளத்தின் முதலாம் கட்ட அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் பிற்பட்டகாலத்தில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவில்லை. மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்தமையால் 321 ஏக்கர் செய்கை கைவிடப்பட்டதுடன், நன்னீர் மீன்பிடியும் பாதிக்கப்பட்டிருந்தது,
குளத்தி ஆளப்படுத்தி குடமுருட்டி ஊடாக செல்லும் மழை நீரை முழுமையாக தேக்குவதற்கான அடுத்த கட்ட அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுமாயின் அப்பகுதியில் மேலும் அதிக செய்கை செய்யப்படும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும். குறித்த குளம் தற்போது வற்றி இவ்வாறு காட்சியளிக்கின்றது. இவ்வாறு தொடரும் வரட்சி காரணமாக அப்பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் பிரச்சினை கூட பாரிய சாவாலாகவே காணப்படும் என்பது மக்களின் கருத்தாகும்.
குறித்த குளத்தினை அபிவிருத்தி செய்தால் நல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளிற்கு சிறுபுாகம் செய்யை பண்ணக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும், பூநகரி பிரதேசத்திற்கான குடிநீர் பிரச்சினையை சற்றேனும் தீர்க்க முடியும் எனவும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு மாவட்டத்தின் பல குளங்கள் புாதுமான அபிவிருத்திகள் இல்லாது தொடர்ந்தும் காணப்படுகின்றமையால் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பல்வேறு சவால்கள் காணப்படுகின்றமை நிதர்சனமான உண்மையாகும்.வடக்கின் இதயம் எனவும், விவசாய மாவட்டம் எனவும் அழைக்கப்படும் கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்திகள் தொட்ரபி்ல மும்மொழியப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வியலாளர்கள், பிரதேச மக்களின் எதிர்பார்ப்பாகும்.

