ஷிரந்தியிடம் சி.ஐ.டி மூன்று மணிநேரம் வாக்குமூலம் பதிவு

389 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் சுமார் மணிநேரம் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர்.

கடந்த அரசாங்கத்தின் போது செஞ்சிலுவை சங்கத்தால் சிரிலிய அமைப்புக்கு வழங்கப்பட்ட டிப்பெண்டர் ரக வாகனத்தின் நிறத்தை மாற்றி, யோஷித்த ராஜபக்ஷவின் உபயோகத்துக்கு பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்ய அவர் இன்று முற்பகல் 10 மணியளவில் குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையானார்.

இதையடுத்து, சுமார் 3 மணிநேரம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டு, 1.10 அளவில் குற்றப் புலனாய்வு பிரிவிலிருந்து அவர் வெளியேறியுள்ளார்.

Leave a comment