இலங்கை மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு, தமது சாட்சி விசாரணைகள் தொடர்பில் இன்று தெளிவுபடுத்தியுள்ளது.
அறிக்கையொன்றினூடாக ஆணைக்குழு இதனைத் தெளிவுபடுத்தியுள்ளது.
தமக்குள்ள அதிகார வரைறைக்குள்ளேயே செயற்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் விசாரணைகளுடன் உறுதியான தொடர்புடையவர்கள் மற்றும் தேவையானவர்கள் எனக் கருத்தப்படுபவர்களிடம் மாத்திரமே சாட்சிகளைப் பதிவுசெய்துள்ளது.
அத்துடன், வௌ;வேறு தரப்பினரால் வெளியிடப்படும் கருத்துக்ளுக்கு அமைய சாட்சியாளர்கள் அழைக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி ஆணைக்குழு விளக்கமளித்துள்ளது.