மரத்தில் இருந்து தவறி வீழ்ந்து நபர் ஒருவர் உயிரிழப்பு

236 0

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டொரிங்டன் தோட்டம் மோர்ஷன் பிரிவில் சவுக்கு மரத்தில் இருந்து தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (14) மாலையில் இடம்பெற்றுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

42 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான எம்.ஜெயரட்ணம் என்பவரே சம்பவத்தில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் தனது மரக்கறி தோட்டத்திற்கு பாதுகாப்பு வேலி அமைக்க மரக்குற்றிகளை வெட்டுவதற்கு சவுக்கு மரத்தில் உச்சியில் ஏறிய நிலையில் தவறி கீழே விழுந்து தலையில் தாக்கம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் அக்கரப்பத்தனை வைத்தியசாலையிலிருந்து பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a comment