42 உறுப்­பி­னர்கள் நிரந்­த­ர­மாக விலகி செல்வர்-கெஹே­லிய ரம்­புக்­வெல்ல

354 0

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ உள்­ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியில் செயற்­படும் 42 ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்­களும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவில் உறுப்­பு­ரிமை பெற்றுக் கொள்ள உள்­ளனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சுதந்­திர கட்சி மீது ஏற்­பட்­டுள்ள அதி­ருப்­தியும் பொது ஏமாற்­றுப்­போக்­குமே இதற்கு பிர­தான கார­ணங்­க­ளாகும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹே­லிய ரம்­புக்­வெல்ல தெரி­வித்தார்.

நல்­லாட்சி என்று அழைக்­கப்­ப­டு­கின்ற  ரணில் – மைத்­தி­ரியின் கூட்­டாட்சி தொடர்பில் பொது மக்கள் அதி­ருப்­தி­யுடன் உள்­ளனர். நாட்­டிற்கு மாற்று அர­சியல் சக்தி ஒன்றின் தேவை அத்­தி­யா­வ­சி­ய­மான தேவை­யாக வெளிப்­பட்­டுள்­ளது. பல சந்­தர்ப்­பங்­களில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யி­லி­ருந்து விலகி செல்ல கூடாது என்ற நிலைப்­பாட்­டி­லேயே கூட்டு எதிர் கட்­சியில் இருந்து செயற்­பட்டோம். ஆனால் தற்­போது அந்த நிலைப்­பாட்டில் மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இது குறித்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹ­லிய ரம்­புக்­வெல்ல தொடர்ந்தும் தெளி­வுப்­ப­டுத்­து­கையில்

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன என்ற கட்­சியின் தவி­சா­ள­ராக முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளார். அந்த கட்­சியில் உறுப்­பு­ரி­மையை பெற்று எதிர்­கால அர­சியல் நட­வ­டிக்­கை­களை தொடர தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ உள்­ளிட்ட கூட்டு எதிர் கட்­சியின் செயற்­படும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் 42 உறுப்­பி­னர்­களும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவில் இணை­வ­தற்கு தீர­மா­னித்­துள்­ளனர்.

மிக விரைவில் இதற்­கான அறி­விப்­புகள் விடுக்­கப்­படும். நல்­லாட்சி அர­சாங்­கத்தை பொறுத்த வரையில் ஆட்சி பீடம் ஏறும் முன்னர் வழங்­கிய உறு­தி­மொ­ழிகள் அனைத்தும் புறம்­தள்­ளப்­பட்­டுள்­ளன. நல்­லாட்­சியில் கூட்­டணி அமைத்துக் கொண்­டுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி இன்று அனைத்­தையும் மறந்து செயற்­ப­டு­கின்­றது. கட்­சியின் கொள்கை மற்றும் ஆத­ர­வா­ளர்­களின் எதிர்­காலம் கேள்­விக்­கு­றி­யாகும்   நிலை­யி­லேயே சுதந்­திர கட்சி ஆட்­சியில் உள்­ளது.

மறு­புறம் தேசிய வளங்­களை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­பனை செய்யும் ஐக்­கிய தேசிய கட்­சியின் கொள்­கைக்கு அடி­ப­ணிந்தே அர­சாங்­கத்தில் உள்ள சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்கள் உள்­ளனர். இவர்­க­ளுடன் தொடர்ந்தும் ஒன்­றித்து பய­ணிக்க இய­லாது. எனவே தான் கூட்டு எதிர் கட்­சியில் உள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்சியிலிருந்து  விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைவதற்கு தீர்மானித்துள்ளோம். இதற்காக எமது பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தப்பட்டால் அதனை சட்ட ரீதியில் எதிர்கொள்வோம்  என்றார்.

Leave a comment