மஹிந்த சிந்தனையின் இலக்குகளே இதுவரை ஐ.நா.வின் நிகழ்ச்சி திட்டத்தில்-சீ.வி.விக்­கி­னேஸ்­வரன்

393 0

ஐக்­கிய நாடு­களின் அபி­வி­ருத்தி நிகழ்ச்சி நிரலில் இது­வ­ரையில்  வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. அவ்­வாறு செயற்­ப­டுத்­தப்­பட்ட அபி­வி­ருத்தி செயற்­பா­டுகள் அம்­மக்­க­ளுக்கு முழு­மை­யாக சென்­ற­டை­ய­வில்லை. தொடர்ந்தும் வடக்கு,கிழக்கு மக்கள் அச்­சத்தின் மத்­தி­யி­லேயே வாழ்ந்து வரு­கின்­றனர். அவர்­க­ளுக்­கான உண்­மை­யான நேசக்­க­ரத்தை ஐ.நா வழங்க வேண்டும் என வட­மா­காண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

ஐக்­கிய நாடு­களின் பிராந்­திய குழுவின் கலந்­து­ரை­யாடல் இலங்­கைக்­கான ஐக்­கிய நாடு­களின் வதி­விட பிர­தி­நிதி யுனா மெக்­கி­யூ­லியின் தலை­மையில்  கைத்­த­டியில் நேற்று இடம்­பெற்­றது. இதன்­போது வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சிறப்­புரை ஆற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

இன்று ஐக்­கிய நாடு­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி  பலர் எம்­முடன் இருப்­பது மகிழ்ச்­சி­யாக உள்­ளது. 2018 தொடக்கம் 2022 வரை­யி­லான காலப்­ப­குதி வரையில் ஐக்­கிய நாடு­களின் நிலை­யான அபி­வி­ருத்தி நிகழ்ச்சி நிர­லுக்கு கீழ் செயற்­பட வேண்­டிய முறைமை தொடர்பில் நாம் அறிவோம்.

ஐக்­கிய நாடு­க­ளினால் அடுத்த வருடம் குறித்த நிகழ்ச்­சி நிரல் ஆரம்­பிக்­கப்­ப­டும்­போது நாமும் வட­மா­காண சபையும் இணைந்­தி­ருப்போம். 2013 தொடக்கம் 2017 வரையில் செயற்­ப­டுத்ப்­பட்ட ஐக்­கிய நாடு­களின் அபி­வி­ருத்தி நிகழ்ச்சி நிர­லுக்கும்  2018 தொடக்கம் 2022 வரை­யி­லான காலப்­ப­குதி வரையில் ஐக்­கிய நாடு­களின் நிலை­யான அபி­வி­ருத்தி நிகழ்ச்சி நிர­லுக்கும் இடையில் பாரிய வித்­தி­யா­சங்கள் உள்­ளன.

மஹிந்த சிந்­த­னையின் இலக்­கு­களே  2013 தொடக்கம் 2017 வரையில் செயற்­ப­டுத்ப்­பட்ட ஐக்­கிய நாடு­களின் அபி­வி­ருத்தி நிகழ்ச்சி நிரலில் பிர­தான இடம் வகித்­தன. வட மாகாண மக்கள் மஹிந்த சிந்­த­னையை நிரா­க­ரித்­த­வர்கள் என்ற வகையில் ஐக்­கிய நாடு­களின் அபி­வி­ருத்தி நிகழ்ச்சி நிர­லுக்கு முழு­மை­யான பங்­க­ளிப்பு வழங்க முடி­யாது போனது.

2015 ஆம் ஆண்டு ஜன­வரி 8 ஆம் திகதி அர­சாங்கம் மாறு­வ­தற்கு நாமும் பிர­தான சக்­தி­யாக செயற்­பட்டோம். ஏனெனில் எமது எண்­ணங்கள் முழு­மை­யாக அந்த அர­சாங்­கத்தில் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. குறிப்­பாக அப்­போது ஐக்­கிய நாடு­களின் வதி­விட பிர­தி­நி­தி­யாக இருந்த சுபினை நந்தி மத்­திய அர­சாங்கம் சொல்லும் விட­யங்­க­ளுக்கு அடிப்­ப­ணிந்தே செயற்­ப­ட்டு வந்தார். ஆனால் தற்­போது அவ்­வா­றில்லை. ஐக்­கிய நாடுகள் குடும்பம் இன்று எங்­க­ளோடு உள்­ளது.

ஐக்­கிய நாடு­களின் வதி­விட பிர­தி­நி­தி­யாக இருந்த சுபினை நந்­த­யிடம் நாம் பல விட­யங்கள் தொடர்பில் கவனம் செலுத்­து­மாறு கூறி­யி­ருந்தோம். ஐக்­கிய நாடு­களின் இலங்கை மீதான தனித்­து­வ­மான செயற்­ப­திறன் அறிக்­கையில் ஐக்­கிய நாடுகள் நடு­நி­லை­மை­யாக செயற்­பட்­டதா என்­பது சந்­தே­க­மா­ன­தே­யாகும்.

சமா­தான மீள்­கட்­டு­மா­னத்தில் மீள்­கு­டி­ய­மர்த்­தப்­படல், பெண்­த­லைமை குடும்­பங்­க­ளுக்கு நிலை­யான வாழ்­வா­தா­ரத்தை பெற்­றுக்­கொ­டுத்தல், குறிப்­பாக வன்­னியில் வாழும் வரிய மக்­க­ளுக்கு குடி­யி­ருப்­பு­களை அமைக்­கவும் பொரு­ளா­தார ரீதி­யா­கவும் உத­வுதல் போன்ற விட­யங்­களை முன்­னி­லைப்­ப­டுத்த விரும்­பு­கின்றோம்.

இந்­நாடு வரு­மானம் குறைந்த அந்­தஸ்­தி­லி­ருந்து மத்­திய வரு­மானம் பெறும் நாடாக உயர்ந்­துள்­ள­தாக கூறு­கின்­றனர். ஆனால் வட. மாகாணம் அவ்­வா­றில்லை. தொடர்ந்தும் குறை வரு­மானம் பெறும் மாகா­ண­மா­கவே காணப்­ப­டு­கின்­றது என்­பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தொடர்ந்தும் ஒரு இலட்­சத்து ஐம்­தா­யி­ரத்­தி்ற்கும் மேற்­பட்ட இரா­ணு­வத்­தினர் எமது பூர்­விக நிலங்­க­ளையும் அலு­வ­லக கட்­டி­டங்­க­ளையும் இயற்கை வழங்­களையும் பாவிக்­கின்­றனர். குறிப்­பாக மீன்­பிடி சமூத்­தி­ன­ரி­டையே தற்­போது அச்சம் கலந்த சூழல் உரு­வா­கி­யுள்­ளது. தெற்­கி­லி­ருந்து  வரும் மீன­வர்­கள சட்­டத்­திற்கு முரணான மீன்பிடி நட­வ­டிக்­கை­களை வடக்கில் மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

முல்­லைத்­தீவு மா­வட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட ஐக்­கிய நாடு­களின் மீள்­கு­டி­யேற்ற நிகழ்ச்­சி­திட்­டத்­திலும் கூட பல பிரச்­சி­னைகள் தோன்­றி­யி­ருந்­தன. குறிப்­பாக வழ­மைக்கு மாறாக காடுகள் அழிக்­கப்­பட்டு  முஸ்­லீம்­களின் குடி­யி­ருப்­பு­களில் பாதை , குடி­யி­ருப்­புக்கள் அமைக்­கப்­பட்­டன.  உங்­க­ளது செயற்­பா­டு­களை குறை­கூற வேண்­டிய எண்ணம் எனக்கு இல்லை.  ஆனாலும் ஐக்­கிய நாடுகள் வடக்கு கிழக்கில் வாழும் மக்­க­ளுடன் எந்த அளவு ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும் என்­ப­தனை உணர வேண்டும்.

நாம் அறை­நுற்­றாண்­டு­க­ளுக்கு மேலாக எமது தனித்த அடை­யா­ளத்தை இழந்­துள்ளோம். எமது மேலான உரி­மையையும் அர­சாங்கம் பறித்­துக்­கொண்­டுள்­ளது. 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் உருவாக்கப்பட்ட மிலேனிய அபிவிருத்தி இலக்குகள் தற்போது 17 நிலையான அபிவிருத்தி இலக்குகளாக மாற்றம் கண்டுள்ளன.

இப்போதே வடக்கு, கிழக்கு மாகாணங்கள் நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும். ஐக்கிய நாடுகளினால் செயற்படுத்தப்பட்ட பல அபிவிருத்தி செயற்பாடுகளில் இடைவெளிகள் காணப்படுகின்றன.அது தொடர்பில்  நாம் கலந்துரையாட வேண்டும் என்றார்.

Leave a comment