இளஞ்செழியனின் மெய் பாதுகாவளரின் மனைவிக்கு காவல்துறையில் பணி 

251 0

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனின் மெய்பாதுகாவலராக பணியாற்றிய நிலையில் கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கி பிரயோத்தில் பலியான காவல்துறை பரிசோதகரின் மனைவியை மீண்டும் காவல்துறையில் இணைத்துக் கொள்ள தேசிய காவல்துறை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அவரால் காவல்துறை மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மேன்முறையீடு குறித்த ஆராய்ந்ததன் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, அவரின் இல்லம் அமைந்துள்ள பிரதேசத்திற்கு அருகில் உள்ள காவல்துறை நிலையமான பள்ளம காவல்துறை நிலையத்தில் பணிப்புரிய நேற்று முதல் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a comment