விதிமுறைகளை மீறும் சாரத்திகளுக்கு 25 ஆயிரம் அபராதம் – இன்று முதல் அமுல்

209 0

வீதி விதிமுறைகளை மீறும் வாகன சாரதிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது.

வீதிபாதுகாப்புக்கான தேசிய குழுவின் தலைவர் சிசிற கொடகொட இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், அங்கீகரிக்கப்பட்ட காப்புறுதி இன்மை, சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவரை சாரதியாக பணிக்கு அமர்த்துதல், மதுபோதையில் வாகனம் செலுத்துதல் மற்றும் தொடருந்து கடவைகளில் ஒழுங்கற்ற முறையில் வாகனத்தை செலுத்தல் ஆகிய குற்றங்களுக்கு எதிராக இந்த அபராதம் விதிக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும் இந்த அபராத அதிகரிப்பு பல்வேறு தரப்பினரால் எதிர்ப்புகள் வெளியாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment