செஞ்சோலை படுகொலையின் 11 ஆவது ஆண்டு நினைவு தினம்(காணொளி)

270 0

செஞ்சோலை படுகொலையின் 11 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று செஞ்சோலை படுகொலையின் 11 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள தூபிக்கு முன்னால் தீபம் ஏற்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அஞ்சலி நிகழ்வில் பல்லைக்கழக துணைவேந்தர், விரிவுரையாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

2006 ஆண்டு முல்லைத்தீவு வள்ளிபுனத்தில் செஞ்சோலை சிறுவர் இல்லம் மீது மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதலில் சிறுவர்கள் உயிரிழந்தமை குறிப்பிட்டத்தக்கது.

Leave a comment