25 இலட்சம் ரூபாய் பெறுமதியான புகையிலையுடன் ஒருவர் கைது

207 0

போதைப்பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் விசேட புகையிலை வைத்திருந்த ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

டுபாயிலிருந்து ஸ்ரீ லங்கன் UL 226 என்ற விமானம் மூலம் இலங்கை வந்த 22 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கைது செய்யப்பட நபரிடமிருந்து சுமார் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 1600 புகையிலை பக்கற்றுகள் கைப்படறப்பட்டதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க சுங்க திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment