அரசாங்க தரப்பும், தமிழ்த் தேசியக் கூட்டைப்பினரும் நாடகங்களை அரங்கேற்றாமல் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கட்சியினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கு, கேப்பாப்புலவு, இரணை தீவு உட்பட எமது மக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்கள் இன்னும் வழங்கப்படாத நிலையில், எமது மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர்.
இத்தகைய நிலையில் இந்த போராட்டங்கள் உரிய தரப்பினரின் அக்கறைக்கு எட்டப்படாமல் இருப்பது துரதிஷ்டவசமான நிலைமையாகும் என குறிப்பிட்டுள்ளார்.
தமது மக்களுக்கு அவர்களது காணி, நிலங்களே தேவை அன்றி, வெறும் அறிக்கைகளும், மேடைப் பேச்சுக்களும் அல்ல.
எனவே, காரணங்களை கூறிக் மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டிருக்காமல், அவர்களது காணி;களை விடுவித்துக் கொடுப்பதற்கு இவர்கள் முன்வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

