ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோவின் தடை தற்காலிகமாக நீக்கம்

310 0

jonston fernanado_CIவெளிநாடு செல்வதற்காக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை கொழும்பு முதன்மை நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியுள்ளது.

தமது மனைவியின் சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் செல்ல அனுமதியளிக்குமாறு ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ நீதிமன்றில் முன்வைத்த வேண்டுகோளுக்கமையவே இந்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி வரை இந்த தடையை நீக்க கொழும்பு முதன்மை நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

சொத்து விபரங்கள் முன்வைக்கப்படாத குற்றச்சாட்டு தொடர்பில் தொடரப்பட்டிருந்த வழக்கு விசாரணைக்கமைய முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்ட் பெர்ணாண்டோவின் வெளிநாட்டு கடவுச்சீட்டு நீதிமன்றத்தால் கையகப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.