நாட்டின் முதலாவது பயணிகள் பேருந்து பெண் சாரதி – பிணையில் செல்ல அனுமதி

347 0

1470964532_9124046_hirunews_Lady-Bus-Driverகைது செய்யப்பட்டிருந்த நாட்டின் முதலாவது பயணிகள் பேருந்து பெண் சாரதியான லக்ஸி சசிந்தா என்பவரை பிணையில் செல்ல கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

அரச நிறுவகம் ஒன்றுக்குள் அத்துமீறி பிரவேசித்து அதன் அதிகாரிகளை தூற்றிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பியதிலக ஹரிச்சந்திர மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து குறித்த பெண் சாரதி நேற்று நாரஹென்பிட்ட காவற்துறைக்கு வாக்கு மூலம் வழங்க சென்றிருந்தார்.

இதன்போது அவர் உள்ளிட்ட ஐந்து பேரை காவற்துறையினர் கைது செய்திருந்தனர்.

பேருந்து ஒன்றுக்கான வீதி அனுமதி பத்திரம் தொடர்பிலேயே அவர் குறித்த அதிகாரிகளை தூற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.