வவுனியாவில் மாணவனுக்கு கத்திக்குத்து; வாளுடன் ஒருவர் கைது

261 0

வவுனியா கேக்கவத்தை பகுதியிலிருந்து நேற்று மாலை வாளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேக்கவத்தை 12 ஆம் ஒழுங்கையில் வசிக்கும் ககனிஸ்டன் என்ற கம்மாலை (இரும்பு வேலை செய்யும் நிலையம்வைத்துள்ள 25 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது வீட்டில் இருந்து வில்லுத்தகடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் 21.5 அங்குளமுடைய வாளொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவிற்கு வந்து தொழில் புரிந்து வந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் மாணவ குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்ற நிலையில் ஒரு மாணவனுக்கு சிறிய ரக கத்தியால் மற்றைய மாணவன்வெட்டியதில் காயமேற்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a comment